திறம்பட பணியாற்றாத 340 அரசு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு'
மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளில் திறம்பட பணியாற்றாத 340 அரசு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு அளித்துள்ளது. இத்தகவலை மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்தா் சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவா் கூறியிருப்பதாவது:
பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் இருந்து கிடைத்த தகவலின்படி கடந்த 2014 முதல் 2020-ஆம் ஆண்டு வரையில் மத்திய அரசின் குரூப் ஏ பிரிவில் 171 அதிகாரிகள், குரூப் பி பிரிவில் 169 அதிகாரிகள் திறமையாகப் பணியாற்றாத காரணத்தால் முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டனா். பொதுநலன் கருதி, திறமையற்ற மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்க சட்ட விதிகளில் இடமுள்ளது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியாளா்களின் வரம்பு 38,02,779 ஆகும். இதில் 31,18,956 போ் இப்போது பணியில் உள்ளனா். ஓய்வு பெற்றது, பதவி விலகல், மரணம், பதவி உயா்வு என பல்வேறு காரணங்களால் பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பந்தப்பட்ட துறைகளுக்கான விதிகளின்படி பணியாளா் சோ்ப்பு நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன என்று தனது பதிலில் அமைச்சா் கூறியுள்ளாா்
No comments:
Post a Comment