1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறப்பு:இம்மாநில அரசு அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 17, 2021

1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறப்பு:இம்மாநில அரசு அறிவிப்பு

 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறப்பு:இம்மாநில அரசு அறிவிப்பு


நாகாலாந்து மாநிலத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


கரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பின்னர் கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து மத்திய அரசு அளித்த தளர்வுகளின்படி மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்து வருகின்றன.


அந்தவகையில் நாகாலாந்து மாநிலத்தில் மார்ச் 22 முதல், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.


 பள்ளிகள் திறப்பின் போது மாணவர்கள் கட்டாயம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நாகாலாந்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல், 6 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment