தேர்தல் பயிற்சிக்கு வராத 219 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 29, 2021

தேர்தல் பயிற்சிக்கு வராத 219 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

 தேர்தல் பயிற்சிக்கு வராத 219 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்


சோழிங்கநல்லூர் தொகுதி தேர்தல் பணிக்கான பயிற்சியில் பங்கேற்காத, 219 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். 

அந்த வகையில், நடக்க உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி சட்டசபை தேர்தல் பணிபுரிய, 3,567 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


 இந்நிலையில், அவர்களுக்கான தேர்தல் பணிக்கான 2ம்கட்ட பயிற்சி 19ம் தேதி  அளிக்கப்பட்டது. இதில், எந்த வித அறிவிப்பும் இன்றி பயிற்சியில், 219 பேர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு, காரணம் கேட்பு குறிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய பதில் அளிக்காத பட்சத்தில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 comment:

  1. இதேபோல எல்லா மாவட்டத்துக்கு செய்யலாமே

    ReplyDelete