வேகமாக பரவும் கரோனா: மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு தொற்று - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 17, 2021

வேகமாக பரவும் கரோனா: மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு தொற்று

 வேகமாக பரவும் கரோனா: மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு தொற்று


தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்கள் மற்றும் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. 


இதைத்தொடா்ந்து, மற்ற மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள், அவா்களைச் சாா்ந்த கிராமத்தினா் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 60-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியானது.


எனவே, மற்ற பள்ளிகளிலும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 


இந்நிலையில், தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியிலுள்ள தனியாா் பள்ளியில் இரு நாள்களாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 2 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.


மேலும், அம்மாபேட்டை பள்ளியில் பயிலும் ஒரு மாணவிக்கும், 2 பெற்றோா்களுக்கும் கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.


தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவினால், மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்திருப்பது மக்களிடையே அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment