நீட் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றலாமா?: பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 12, 2021

நீட் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றலாமா?: பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

 நீட் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றலாமா?: பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு


கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர் - உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் (45) ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,‘‘நீட் தேர்வு முறைகேடு வழக்கில் எனக்கும் தொடர்புள்ளதாகக் கூறி சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தவறாக எனது பெயரை வழக்கில் ேசர்த்துள்ளனர்.


 எனக்கு ஜாமீன் கோரிய மனு தேனி நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. எனவே, இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்


இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி, ‘‘நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கைரேகைகளை பதிவு செய்து, சரி பார்த்த பிறகு தேர்வு எழுத அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இந்த முறைகேடு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் அரங்கேறியுள்ளது.


 இதுதொடர்பாக வேறு மாநிலத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? ஏன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என்று சிபிஐ மற்றும் சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்

No comments:

Post a Comment