ஒரு வாரத்தில் மட்டும் 15 ஆசிரியர்களுக்கு கொரோனா - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 24, 2021

ஒரு வாரத்தில் மட்டும் 15 ஆசிரியர்களுக்கு கொரோனா

 ஒரு வாரத்தில் மட்டும் 15 ஆசிரியர்களுக்கு கொரோனா


திருப்பூர் மாவட்டத்தில், ஒரு வாரத்தில் மட்டும், 15 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


செய்முறைத்தேர்வுகள் நிறைவடைந்து நேற்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். ஒன்பது முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்ட போதும், ஆன்லைன் வகுப்புகள் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தலுக்கு பிறகு, ஆசிரியர்கள் அதிகளவில் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 


திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில், 15 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் கூறுகையில், 'உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க மறுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, சமீபத்தில் இடுவம்பாளையம் பள்ளி ஆசிரியர் ஒருவர், நோய்த்தொற்றால் உயிரிழந்தார். கற்பித்தல் செயல்பாடுகளே இல்லாத நிலையில், ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டிய அவசியமில்லை. தொற்று பரவுவதால், ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்' என்றனர்.

No comments:

Post a Comment