ராணுவ ஆள் சேர்ப்புக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 20, 2021

ராணுவ ஆள் சேர்ப்புக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு

 ராணுவ ஆள் சேர்ப்புக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு


கோவையில் நடக்க இருந்த ராணுவ ஆள் சேர்ப்புக்கான பொது நுழைவுத்தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ராணுவ ஆள்சேர்ப்பு மைய இயக்குனர் கர்னல் ராவத் வெளியிட்ட அறிக்கை:ராணுவ வீரர் (தொழில்நுட்பம்), உதவி செவிலியர், எழுத்தர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள் சேர்ப்பு கோவையில் கடந்த ஜன., மாதம் நடந்தது


இதில், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் ஆகிய, 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கான பொது நுழைவுத்தேர்வு ஏப்.25ம் தேதி கோவை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று காரணத்தால், நுழைவுத்தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது. 



ஏற்கனவே வழங்கப்பட்ட நுழைவு சீட்டுகள் ரத்து செய்யப்படுகின்றன.பொது நுழைவுத் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அறிவிப்புகளை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment