ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 28, 2021

ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி

 ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி


தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டை சரிசெய்ய, பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன


மாணவர்களிடம் உளவியல் ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை சரிசெய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, உளவியல் நிபுணர்கள் மூலம் குழந்தைகள் மனநலன் தொடர்பான பயிற்சியை ஆசிரியர்களுக்கு அளிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "குழந்தைகளின் மனநலன்தொடர்பான பயிற்சி பெற்று, இடைநிலை ஆசிரியராகப் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரங்களை துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


இந்தப் பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கு, இணையவழியில் கூடுதல் சிறப்பு பயிற்சிஅளிக்கப்படும். அவர்கள் மூலம் இதர ஆசிரியர்களுக்கு பயிற்சி தரவும் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment