12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசித்து முடிவு..அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி..!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 10, 2021

12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசித்து முடிவு..அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி..!!

 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசித்து முடிவு..அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி..!!


12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 


சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் பொறுப்பு செயலாளராக இருக்கக்கூடிய அபூர்வா, துணை செயலாளர்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தேர்வு துறை இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். 


தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 5ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவிருந்தது. ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  கொரோனா தன்னுடைய கோரமுகத்தை காட்டியதன் விளைவாக 12ம் வகுப்பு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்தது. 


நாடு முழுவதும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவு எடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பிலான ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. 

No comments:

Post a Comment