1,212 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரப் பணிக்கு மாற்றம்: தமிழக சுகாதாரத் துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 3, 2021

1,212 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரப் பணிக்கு மாற்றம்: தமிழக சுகாதாரத் துறை

 1,212 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரப் பணிக்கு மாற்றம்: தமிழக சுகாதாரத் துறை


ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 1,212 செவிலியர்கள், நிரந்தரப் பணிக்கு மாற்றப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


2015 - 2016-ஆம் ஆண்டு எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்திருந்த ஒப்பந்த செவிலியர்கள் 1,212 பேருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.


ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வந்த 1,212 செவிலியர்களின் ஒப்பந்தம் வரும் ஐந்தாம் தேதியுடன் நிறைவு பெறவிருந்த நிலையில், அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ள செவிலியர்கள், மே 10-ஆம் தேதிக்கு முன்னதாக சென்னையில் பணியில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் தற்போது கரோனா பேரிடர் தீவிரமடைந்து வருவதால், இவர்களை சென்னையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுவரை ரூ.15 ஆயிரத்தை ஊதியமாகப் பெற்று வந்த செவிலியர்களுக்கு, இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும். ஒப்பந்தப் பணியாளர்களாக இருந்த தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிய தமிழக அரசுக்கு செவிலியர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment