கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 12, 2021

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர்

 கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த  நடிகர்


கரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதியுதவி அளித்தனர். 


கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இந்நிலையில் நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தினர் சார்பில் கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினர்


அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் சிவகுமார், கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவுவதற்காக தங்களால் முடிந்த நிதியை அளித்ததாக தெரிவித்தார். மேலும் கரோனா தொற்றிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என சிவகுமார் கேட்டுக்கொண்டார். 

1 comment: