துறை தேர்வுகள் தள்ளி வைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 30, 2021

துறை தேர்வுகள் தள்ளி வைப்பு

 துறை தேர்வுகள் தள்ளி வைப்பு


அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட அறிவிப்பு:போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை -2 பணிக்கு, ஜூன் 8 முதல் நடத்தவிருந்த நேர்முக தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது.இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


 ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு நடத்தவிருந்த கவுன்சிலிங் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.அரசு ஊழியர்களுக்கு, ஜூன் 22 முதல், 30 வரை நடத்த விருந்த துறை தேர்வுகள், ஆகஸ்டுக்கு தள்ளி வைக்கப்படுகின்றன; தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த தேர்வுக்கான விண்ணப்ப தேதி, ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நடத்தப்பட்ட, 14 துறை தேர்வு முடிவுகள், ஜூலை 20ல் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment