பல்வேறு பணியிடம்: திருநங்கையருக்கு அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 24, 2021

பல்வேறு பணியிடம்: திருநங்கையருக்கு அழைப்பு

 பல்வேறு பணியிடம்: திருநங்கையருக்கு அழைப்பு


சென்னையில் துவங்க உள்ள பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு இல்லத்தில் பணிபுரிய, திருநங்கையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின், சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரைபடி, திருநங்கையருக்கு பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு இல்லம், சென்னையில் துவங்கப்பட உள்ளது


.அரசு சாரா அமைப்பில் இயங்கயுள்ள இந்த இல்லத்தில் பணிபுரிய, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். திட்ட மேலாளர், கணக்காளுமை உதவியாளர், ஆற்றுப்படுத்துனர், பகுதி நேர மருத்துவர், சமையலர், சுத்தம் செய்பவர், காவல் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


திருநங்கையருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியுடையோர் உரிய ஆவணங்களுடன், கரிமா க்ரஹ், சி- 122/69, கார்த்திகேயன் சாலை, பெரியார் நகர், சென்னை - 82 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்.அதேபோல்,


 garimagrehtra@gmail.com 


என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் சீதாலட்சுமி தெரிவித்துஉள்ளார்

No comments:

Post a Comment