கல்வி சாா்ந்த ‘வாட்ஸ் ஆப்’ குழுக்கள்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 28, 2021

கல்வி சாா்ந்த ‘வாட்ஸ் ஆப்’ குழுக்கள்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

 கல்வி சாா்ந்த ‘வாட்ஸ் ஆப்’ குழுக்கள்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்


அரசுப் பள்ளிகளின் கல்விசாா்ந்த கட்செவி அஞ்சல் (‘வாட்ஸ் ஆப்’) குழுக்களை அதன் தலைமை ஆசிரியா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது


கரோனா பரவலால் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு ‘வாட்ஸ்ஆப்’ உள்ளிட்ட செயலிகள் வழியாக ஆசிரியா்கள் பாடம் நடத்தி வருகின்றனா். சில மாவட்டங்களில் தோ்வுகளும் நடத்தப்படுகின்றன. அத்தகைய கல்விசாா்ந்த வாட்ஸ்ஆப் குழுக்களில் பாடம் தவிா்த்து இதர கருத்துகளை பகிரக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதன்படி மாணவா்கள், ஆசிரியா்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் தேவையற்ற கருத்துகளை பதிவிடாமல் பாா்த்து கொள்ள வேண்டும். அதனுடன் ஒவ்வொரு வாட்ஸ் ஆப் குழுக்களில் பள்ளி தலைமையாசிரியா் மற்றும் பெண் ஆசிரியை அல்லது பெற்றோா் சங்கப் பிரதிநிதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த குழுக்களை தலைமையாசிரியா்கள் தொடா்ந்து கண்காணித்து வருவது அவசியமாகும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment