பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் : சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி நிலவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 10, 2024

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் : சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி நிலவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு

 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் : சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி நிலவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு


தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுமுடிவுகள் நேற்று வெளியாகின.இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளி தேர்ச்சி நிலவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்

2023-24 கல்வியாண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 311 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5 ஆயிரத்து 784 பேர் (79.11 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டு 79.60 சதவீத பேர்தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்த முறை தேர்ச்சி சதவீதம் 0.49 சதவீதம் குறைந்துள்ளது.கணிதப் பாடத்தில் 24 பேர், அறிவியல் பாடத்தில் 4, சமூகஅறிவியல் பாடத்தில் 5 என மொத்தம் 33 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி 500-க்கு 492 மதிப்பெண்களும், தரமணி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் சோழபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் தலா ஒருவர் 500-க்கு 489 மதிப்பெண்களும், ரங்கராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் புத்தா தெரு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தலா ஒருவர் 500-க்கு 488 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

192 மாணவ, மாணவிகள் 451 மதிப்பெண்களுக்கு மேலும், 601 பேர்401-லிருந்து 450 வரையும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கால்வாய் கரை மற்றும் ரங்கராஜபுரம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிவழங்கியுள்ளன.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment