12நாடுகளில் சொந்தமாக குளோபல் காயின் க்ரிப்டோகரென்சிக்களை வெளியிடும் பேஸ்புக் நிறுவனம்.! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 27, 2019

12நாடுகளில் சொந்தமாக குளோபல் காயின் க்ரிப்டோகரென்சிக்களை வெளியிடும் பேஸ்புக் நிறுவனம்.!

பேஸ்புக் நிறுவனம் சார்பில் இப்போது புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் அடுத்த ஆண்டு முதல் 12நாடுகளில் சொந்தமாக க்ரிப்டோகரென்சிக்களை உருவாக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பேஸ்புக்கின் கிரிப்டோகரென்சி குளோபல் காயின் என்ற பெயரில் அழைக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஆண்டு இறுதியில் கிரப்டோகரென்சிக்கான சோதனை துவங்கும் என்றும், பின்பு அடுத்த ஆண்டு முதல் 12நாடுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 2020-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்

டிஜிட்டல் பேமண்ட்ஸ் சிஸ்டம் ஒன்றை துவங்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது

குளோபல் காயின்
அதன்பின்பு குளோபல் காயின் மூலம் மக்கள் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள
வழி செய்வதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனை சாத்தியப்படுத்த பேஸ்புக் நிறவனம் வெஸ்டன் யூனியன் போன்ற பணப்பரிமாற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பணப்பரிமாற்றங்களை மிக எளிமையாக்க முடியும் என்று கூறப்படுகிறது

தொழில்நுட்ப இடையூறுகளை களைய வேண்டும்
மேலும் பேஸ்புக் நிறுவனம் வங்கிகள் மற்றும் புரோக்கர்களுடன் இணைய இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது, பின்பு க்ரிப்டோகரென்சியை அடுத்த ஆண்டு வணிக ரீதியில் வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப இடையூறுகளை களைய வேண்டும்.

மார்க்
பேஸ்புக் நிறுவனர் மார்க் அவர்கள் கிர்ப்டோகரென்சியில் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை பற்றி விவாதிக்க
பேங்க் ஆஃப் இங்கிலாந்திக் ஆளுநரை சமீபத்தில் சந்தித்து பேசினார்

இந்தியா
குறிப்பாக பேஸ்புக்கின் குளோபல் காயின் கிர்டோகரென்சியை இந்தியாவில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக
கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த சேவையை துவங்கவும் பேஸ்புக் பல்வேறு இடையூறுகளை கடக்க வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment