பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கு ஜூன் 3ல் அசல் மதிப்பெண் சான்று - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 31, 2019

பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கு ஜூன் 3ல் அசல் மதிப்பெண் சான்று

மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிளஸ் 1,  பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றுகள்(மறுகூட்டல், மறு மதிப்பீடு உள்பட)அந்தந்த பள்ளி தலைமை  ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும்.


தனித்  தேர்வர்களுக்கான அசல் சான்றுகள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் 3 ம் தேதி முதல் வழங்கப்படும்.  பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் 600 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் மதிப்பெண் பட்டியல்கள் தனித் தனியே வழங்கப்படும்.


பிளஸ் 1,  பிளஸ் 2 வகுப்புகளிலும்  முழுமையாக தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு அவர்கள் இரண்டு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண்பட்டியலாக வழங்கப்படும்.


அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பிறகே அவர்களுக்கு  தனித்தனி மதிப்பெண்கள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment