3.16 மணி நேரத்தில் 30 கி.மீ தூரம் ஓடி 9 வயது தூத்துக்குடி சிறுவன் உலக சாதனை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 19, 2019

3.16 மணி நேரத்தில் 30 கி.மீ தூரம் ஓடி 9 வயது தூத்துக்குடி சிறுவன் உலக சாதனை!

தூத்துக்குடியில் 3.16 மணி நேரத்தில் 30 கி.மீட்டர் தூரம் ஓடி 9 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான்.

தூத்துக்குடி பாரதி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் மணி, . ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி லட்சுமி. இத்தம்பதியின் மகன் சண்முகவேல் (9) அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். குத்துச்சண்டை போட்டிகளில் பல்வேறு பதக்கங்களையும் பெற்றுள்ளான்.

இந்நிலையில் உலக சாதனைக்காக குறைந்த நேரத்தில் அதிக தொலைவு ஓடிக் கடக்க வேண்டும் என சிறுவன் சண்முகவேல் முடிவு செய்தான் இதற்காக சண்முகவேல் கடும் பயிற்சி மேற்கொண்டு வந்தான்.

 இதைத் தொடர்ந்து சாதனைக்காக நேற்று காலை தூத்துக்குடி வஉசி கல்லூரியில் இருந்து ஓட்டத்தை துவக்கிய சண்முகவேல், அங்கிருந்து செக்காரக்குடி பேருந்து நிறுத்தம் வரை 30 கி.மீட்டர் தொலைவு இடைவிடாது 3.16 நிமிடத்தில் கடந்தார்.
இதையடுத்து மாணவன் சண்முகவேலுக்கு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் சுந்தரம் சான்றோர் சான்றிதழ் வழங்கினார்.

 உதவி ஆணையாளர் சொர்ணலதா, டாக்டர் ராஜேஷ், ஜாஸ்மின் ராஜேஷ் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாணவர் சண்முகம் கூறுகையில்; சிறுவயதில் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்ற ஊக்கத்தை எனது பெற்றோர் எனக்கு அளித்து வருகின்றனர்.

இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
 தற்போது 30 கி.மீட்டர் தொலைவில் தூரத்தை 3.16 மணி நேரத்தில் கடந்துள்ளேன். அடுத்து பாக்ஸிங்கில் அதிக பன்ஞ் செய்து உலக சாதனை படைப்பேன் என்றார்.

No comments:

Post a Comment