மாவட்ட கல்வி அலுவலர் நிலையில் உள்ள 7 கல்வி அதிகாரிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 1.6.2019ம் தேதி வரை காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் மற்றும் அதை ஒத்த பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன்பேரில் மாவட்ட கல்வி அலுவலர்கள் நிலையில் தகுதியுடைய 7 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிடுகிறது.
இதன்படி சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலர் தியாகராஜன்-திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன்- நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், வத்தலகுண்டு மாவட்ட கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன்-கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், தேனி மாவட்டக் கல்வி அலுவலர் கணேஷ்-திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், சென்னை (மேற்கு) மாவட்ட கல்வி அலுவலர் ஆறுமுகம்- கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினச்செல்வி -தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி-சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலர் தியாகராஜன்-திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன்- நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், வத்தலகுண்டு மாவட்ட கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன்-கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், தேனி மாவட்டக் கல்வி அலுவலர் கணேஷ்-திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், சென்னை (மேற்கு) மாவட்ட கல்வி அலுவலர் ஆறுமுகம்- கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினச்செல்வி -தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி-சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment