தலையணை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 1, 2019

தலையணை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

தலையணை வைக்காமல் தூங்கும்போது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.நாம் விழித்திருக்கும் நேரத்தில் மூளை எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருக்கும்.


 அதுவே நாம் தூங்கும்போது மூளை ஓய்வில் இருக்கிறது, இது நமது மூளையை நன்கு செயல்பட வைக்க உதவும். எனவே நீங்கள் பொருத்தமில்லாத நிலையில் தூங்கும் போது உங்கள் நினைவாற்றலை தவிர்க்க நீங்கள் தவறுகிறீர்கள்.


நாம் நன்றாக தூங்கினால் மட்டுமே நமது மூளை நன்றாக செயல்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தலையணை வைத்து தூங்கும்போது உங்கள் முகம் தலையணைக்கு உட்புறமாக இருக்க வாய்ப்புள்ளது.


இதனால் உங்கள் முகத்தில் பாக்டீரியாக்கள் பரவ மற்றும் அழுக்கு பரவ வாய்ப்புள்ளது.

இது உங்கள் சருமத்தில் பருக்களை ஏற்படுத்தும். பருக்கள் மட்டுமின்றி இதனால் உங்கள் முகத்தில் சுருக்கங்களும் ஏற்படலாம். உங்கள் முகம் தலையணையுடன் இணைந்திருக்கும் போது அது முன்கூட்டியே சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.


 சருமத்தை பராமரிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் தலையணை வைத்துகொள்ளாமல் தூங்குவது நல்லது.

முதுகு வலியால் அவதிப்படுபவராக நீங்கள் இருந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது தலையணை வைத்து தூங்குவதை தவிர்ப்பதுதான். ஏனெனில் உங்களுக்கு முதுகுவலி ஏற்பட முக்கிய காரணம் உங்களின் தலையணைதான்.


 தலையணை இல்லாமல் தூங்கும்போது உங்கள் முதுகெலும்பு ஓய்வெடுக்க முடியும். மேலும் அதனை இயற்கை வடிவிலேயே வலையாமல் இருக்கும்.

மென்மையான தலையணை வைத்து தூங்கும் போதுதான் உங்களுக்கு நிம்மதியான தூக்கமும், கழுத்து மற்றும் முதுகிற்கு ஓய்வும் கிடைக்கிறது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் நினைப்பது தவறாகும்.


 ஆய்வுகளின் படி தலையணை இல்லாமல் தூங்குவதுதான் உங்கள் தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கும். தலையணை இல்லாமல் தூங்குவது உங்களுக்கு இன்சொமேனியா போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும்.

No comments:

Post a Comment