சேலம் மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லும்படி திருமணம் செய்த கையோடு புதுமண தம்பதியினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லும்படி காவல் துறையினர், வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சேலத்தை சேர்ந்த புதுமண தம்பதி கீர்த்தி ராஜ் மற்றும் தனசிரியா ஆகியோர், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, திருமணம் முடிந்த கையோடு, நெத்திமேட்டிலுள்ள திருமண மண்டபத்திலிருந்து சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடு நோக்கி இருவரும் தலைக்கவசம் அணிந்தபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுமண தம்பதியின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லும்படி காவல் துறையினர், வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சேலத்தை சேர்ந்த புதுமண தம்பதி கீர்த்தி ராஜ் மற்றும் தனசிரியா ஆகியோர், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, திருமணம் முடிந்த கையோடு, நெத்திமேட்டிலுள்ள திருமண மண்டபத்திலிருந்து சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடு நோக்கி இருவரும் தலைக்கவசம் அணிந்தபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுமண தம்பதியின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

No comments:
Post a Comment