ஜூன் இறுதிக்குள் ஓய்வூதியர்கள் வாழ்வுச் சான்றுகளை அளிக்க வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 16, 2019

ஜூன் இறுதிக்குள் ஓய்வூதியர்கள் வாழ்வுச் சான்றுகளை அளிக்க வேண்டும்

ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழ்களை ஜூன் இறுதிக்குள் அளிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 இதுகுறித்து, சனிக்கிழமை வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பு:


ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இந்த ஆண்டுக்கான நேர்காணல் கடந்த ஏப்ரல் முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.


 இப்போது அனைத்து மாவட்டக் கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள், ஓய்வூதியம் அளிக்கும் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் நடைபெற்று வரும் நேர்காணலுக்கு இது வரை வராதவர்கள், வாழ்வுச் சான்றினை சமர்ப்பிக்காதவர்கள் நேரில் சென்றோ அல்லது ஜீவன் பிரமான் என்ற இணையதள வழி சேவை (www.Jeevanpramaan.gov.in) மூலமாகவோ அளிக்கலாம்.


ஜூன் மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள், ஓய்வூதியம் அளிக்கும் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment