ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வேதனை அளிக்கிறது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 22, 2019

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வேதனை அளிக்கிறது

ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய லட்சக்கணக்கான ஆசிரியர்களில் சில நூறு பேர் மட்டுமே தேர்ச்சிப்பெற்றுள்ளனர் என்றும், இது வேதனையளிப்பதாகவும் கூறினார்.

மேலும் இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், கல்வித்தரத்தையும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் தரத்தையும மேம்படுத்துவது அரசின் கடமை என்றும் திருமாவளவன் கூறினார்.

மேலும் கூடங்குளத்தில் 3ஆவது அணு உலை அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment