பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி.க்கு நடத்தப்படுவது போல நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
பாஜக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஏற்படுத்திய தாக்கத்தை விட 100 நாட்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பலமுறை கூறியுள்ளார். மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது. ஆறு மொழிகள் படித்தாக வேண்டும்.
5, 8-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தும். சுபஸ்ரீ மரணம் உலக அரங்கில் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு என கூறினார்
No comments:
Post a Comment