5,8-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் - பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

5,8-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் - பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து


பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி.க்கு நடத்தப்படுவது போல நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

பாஜக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஏற்படுத்திய தாக்கத்தை விட 100 நாட்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பலமுறை கூறியுள்ளார். மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது. ஆறு மொழிகள் படித்தாக வேண்டும்.

5, 8-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தும். சுபஸ்ரீ மரணம் உலக அரங்கில் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு என கூறினார்

No comments:

Post a Comment