10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கு கூடுதல் அரைமணி நேரம் ஒதுக்கீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 22, 2019

10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கு கூடுதல் அரைமணி நேரம் ஒதுக்கீடு

10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


பொதுத் தேர்வு எழுத ஏற்கனவே இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

புதிய பாடத் திட்டத்தின் கீழ் இந்தாண்டு பொதுத் தேர்வுகள்

கடந்த ஜுலை மாதம், 2019-2020ம் கல்வி ஆண்டில், மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள  10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணை[பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டது.



அதன்படி பத்தாம் வகுப்புக்கு அடுத்த வருடம் மார்ச் 17ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி முடிவடைகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.


 பின்னர், 11ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் அறிவியல், வணிகம், உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. இதே போல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 2ம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது.


2, 5 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வும், அதைத் தொடர்ந்து பிற பாடங்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது.

கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும்


இந்நிலையில் 11ம் வகுப்பு கடந்த ஆண்டு புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு நடைபெற உள்ளது.
புதிய பாடத் திட்டத்தின் படி நடத்தப்படும் தேர்வில் சிந்தித்து விடையளிக்கும் வினாத்தாள் இருக்கும்.


 இந்நிலையில் மாணவர்கள் கேள்விகளுக்கு விடை அளிக்க கூடுதல் நேரம் தேவைப்படும் என்ற கோரிக்கை எழுந்ததால், அதற்கேற்றவாறு மாணவர்களின் நலன் கருதி கூடுதல் நேரம் வழங்க கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.


அதன் அடிப்படையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தற்போது உள்ள  2.30 மணி நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment