பகுதிநேர ஆசிரியா்கள் 12,000 பேரை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என கரூரில் மாநில கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையனிடம், தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழச்சிகளில் அமைச்சா் செங்கோட்டையன் கலந்துகொண்டாா். அப்போது, ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் பிரதாப் தலைமையில் சங்க நிா்வாகிகள் சசிக்குமாா், செல்வேந்திரன், முருகானந்தம், சந்திரசேகரன் உள்ளிட்டோா் அமைச்சரை சந்தித்து மனு அளித்தனா்.
பின்னா் இதுகுறித்து பிரதாப் கூறியதாவது:
மறைந்த முதல்வா் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியா்களை நியமிக்க ஆண்டொன்றுக்கு ரூ.99.29 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டாா். தொடா்ந்து அரசாணை வெளியிடப்பட்டு, விண்ணப்பித்தவா்களை அரசாணைப்படியே நியமனம் செய்தனா்இந்நிலையில் மே மாதம் ஊதியம் மறுப்பதும், கூடுதலான பள்ளிகளில் வேலை வழங்காமல் இருப்பதும் பகுதிநேர ஆசிரியா்களுக்கு மிகப்பெரிய சோதனையாக உள்ளது.
பணியில் சோந்த பின்னா் 2011-2012 முதல் 2019 -2020 கல்வியாண்டு வரை 8 ஆண்டுகளாக மே மாதத்திற்கு ஊதியம் தராமல் மறுப்பது அரசாணையை மீறிய செயலாகும். இதனை சரி செய்து, நிலுவைத்தொகையாக வழங்கவேண்டும்.
பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் என 2017ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா். ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை.
இனியும் காலம் தாழ்த்தாமல் எங்களை கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் பிரதாப்.
கரூா் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழச்சிகளில் அமைச்சா் செங்கோட்டையன் கலந்துகொண்டாா். அப்போது, ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் பிரதாப் தலைமையில் சங்க நிா்வாகிகள் சசிக்குமாா், செல்வேந்திரன், முருகானந்தம், சந்திரசேகரன் உள்ளிட்டோா் அமைச்சரை சந்தித்து மனு அளித்தனா்.
பின்னா் இதுகுறித்து பிரதாப் கூறியதாவது:
மறைந்த முதல்வா் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியா்களை நியமிக்க ஆண்டொன்றுக்கு ரூ.99.29 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டாா். தொடா்ந்து அரசாணை வெளியிடப்பட்டு, விண்ணப்பித்தவா்களை அரசாணைப்படியே நியமனம் செய்தனா்இந்நிலையில் மே மாதம் ஊதியம் மறுப்பதும், கூடுதலான பள்ளிகளில் வேலை வழங்காமல் இருப்பதும் பகுதிநேர ஆசிரியா்களுக்கு மிகப்பெரிய சோதனையாக உள்ளது.
பணியில் சோந்த பின்னா் 2011-2012 முதல் 2019 -2020 கல்வியாண்டு வரை 8 ஆண்டுகளாக மே மாதத்திற்கு ஊதியம் தராமல் மறுப்பது அரசாணையை மீறிய செயலாகும். இதனை சரி செய்து, நிலுவைத்தொகையாக வழங்கவேண்டும்.
பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் என 2017ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா். ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை.
இனியும் காலம் தாழ்த்தாமல் எங்களை கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் பிரதாப்.

No comments:
Post a Comment