உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27, 30ம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு ஆணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 24, 2019

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27, 30ம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு ஆணை வெளியீடு

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மற்றும் 30ம் தேதி பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது


. தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள  ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 27 மற்றும் 30ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.



எனவே இந்த 27 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடைபெறும் நாட்களை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணைய செயலாளர்  பொதுத்துறை, பஞ்சாயத்துராஜ் துறை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:தமிழகம் முழுவதும் டிசம்பர் 3ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது.


அதன்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் டிசம்பர் 27, 30ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.


ஆனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை.


அதன்படி மேற்கண்ட 10 மாவட்டங்கள் நீங்கலாக டிசம்பர் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அன்றைய தினமும், டிசம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அரசுப் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது


.இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு 27 மற்றும் 30ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment