மாலை வரை கட்டாய சிறப்பு வகுப்பு : மாநகராட்சி பள்ளிகளுக்கு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 22, 2019

மாலை வரை கட்டாய சிறப்பு வகுப்பு : மாநகராட்சி பள்ளிகளுக்கு உத்தரவு

தமிழகம் முழுக்க, அரையாண்டு தேர்வு பள்ளிகளில் நடக்கிறது. ஆறு, எட்டு, பத்தாம் வகுப்புகளுக்கு காலையிலும், மற்ற வகுப்புகளுக்கு மதிய வேளையிலும் தேர்வு நடக்கிறது. காலையில் தேர்வு எழுதி விட்டு, மாணவர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம்



. அடுத்த தேர்வுக்கு தயாராகாமல், சீருடையில் பொது இடங்களில் மாணவர்கள் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது.பொதுத்தேர்விலும் மாநகராட்சி பள்ளிகளால், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் பின்னுக்கு செல்வதாக, புகார் உள்ளது. எனவே நடப்பாண்டில், அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும், தேர்வு முடிந்தவுடன், சிறப்பு வகுப்பு நடத்தி, அடுத்த தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டுமென கமிஷனர் ஷ்ரவன்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment