பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 22, 2020

பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை



தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 2020, பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


இதை முன்னிட்டு, இக்கோயிலில் ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என்றும், அதற்கு பதிலாக பிப்ரவரி 22-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment