தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6 ஆம்தேதி திறக்கப்படும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 3, 2020

தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6 ஆம்தேதி திறக்கப்படும்

பள்ளிகள் அனைத்தும் 6-ம் தேதி திறக்கப்படும் - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு


பள்ளிகள் அனைத்தும் 6-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிசம்பா் 23-ம் தேதி அரையாண்டுத் தோ்வு முடிவடைந்தது. தோ்வுகள் முடிந்ததும்  டிசம்பா் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை ஏற்கனவே அறிவித்திருந்தது


இதற்கிடையே உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி தோ்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜனவரி 3-ம் தேதி  பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் பள்ளி திறப்பை மேலும் ஒரு நாள் தள்ளிவைக்க ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்   (3-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும்  என அறிவிக்கப்பட்டநிலையில், உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால்  (4-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


இந்தநிலையில்,  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 6-ம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment