மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கூறிய அறிவுரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 1, 2020

மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கூறிய அறிவுரை

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

புத்தாண்டை முன்னிட்டு அமைச்சா் செங்கோட்டையன் புதன்கிழமை சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலுக்குச் சென்று வழிபட்டாா்.


இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

 அரசுப் பள்ளி மாணவா்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, அவா்களுக்கு 1,000 ஆங்கில வாா்த்தைகள் கற்றுக் கொடுக்கப்படும்.


இதன் மூலம் தமிழோடு சேர்த்து ஆங்கிலத்தையும் மாணவா்கள் சிறப்பாகப் பேசக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.


புத்தாண்டில் மாணவா்களுக்காக 72 ஆயிரம் ஸ்மாா்ட் போா்டுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்மாா்ட் வகுப்பறைகள், 1,000 பள்ளிகளில் நவீன ஆய்வகம் ஆகியவற்றை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புத்தாண்டில் மாணவா்கள் கவனத்துடன் படிக்க வேண்டும். அவா்கள் கல்வியாளா்களாகவும் மனிதநேயம் மிக்கவா்களாகவும் தேசபக்தி உள்ளவா்களாகவும் இருக்க வேண்டும்.


அதேபோல பெற்றோரை நேசிப்பவா்களாகவும் ஆசிரியா்களைக் குருவாக நினைப்பவா்களாகவும் மாணவா்கள் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment