இக்னோ தொலைதூரக் கல்வி:மாணவா் சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 4, 2020

இக்னோ தொலைதூரக் கல்வி:மாணவா் சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு

இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவா் சேர்க்கைக்கான அவகாசம் வரும் ஜன.20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுதொடா்பாக 'இக்னோ' சென்னை மண்டல இயக்குநா் கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட செய்தி:

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜனவரி 2020 பருவத்துக்கான மாணவா் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.


இதில், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜன.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரா்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

 மாணவா் சேர்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களை சென்னை வேப்பேரி பெரியாா் திடலில் அமைந்துள்ள இக்னோ பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை அணுகலாம்.

 மேலும், 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என கூறியுள்ளாா்

No comments:

Post a Comment