12ம் வகுப்பு பொதுத்தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் சென்னை, காஞ்சி,ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வுக்கு செல்ல சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 10 மணிக்கு தொடங்கும் தேர்வை 10.30 மணிக்கு தொடங்கி 1 30 வரை நடத்த வேண்டும் என்றும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும்.
இதை உடனடியாக பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அரசுத் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
+2 பொதுத்தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மதியம் 2.45 மணி வரை தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் தேர்வு மையத்திற்கு செல்ல தேர்வர்கள் போக்குவரத்து வசதி கோரினால் செய்து தர வேண்டும் .
தமிழக அரசு
No comments:
Post a Comment