மாணவர்கள் முகக் கவசத்துடன் வந்தால் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்: தேர்வுத்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 23, 2020

மாணவர்கள் முகக் கவசத்துடன் வந்தால் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்: தேர்வுத்துறை

சளி, இருமல் பாதிப்புள்ள மாணவர்கள் முகக் கவசத்துடன் வந்தால் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

உலகையே புரட்டிப் போடும் கரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இங்கு 390 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.


இதற்கிடையே தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மார்ச் 2-ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் (மார்ச் 24) முடிவடைகின்றன. அதேபோல, பிளஸ் 1 தேர்வுகள் 26-ம் தேதியுடன் முடிவடைகின்றன. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையே தேர்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், ''தேர்வு எழுத வரும் மாணவர்கள், தேர்வு எழுதுவதற்கு முன்னதாக கைகளை சோப்பு மூலம் நன்றாக சுத்தம் செய்த பிறகு, கைகளில் சானிட்டைசர் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.


மாணவ, மாணவியர் தங்களுடன் ஹேண்ட் சானிட்டைசரை எடுத்து செல்ல அனுமதிக்கலாம், சளி, இருமல் பாதிப்பு இருப்பவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் அவர்களைத் தேர்வு அறைக்குள் அனுமதிக்க வேண்டும்'' என்று தேர்வுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment