கணினி ஆசிரியா் பதவி உயா்வுக்கான நிபந்தனை தளா்வு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 22, 2020

கணினி ஆசிரியா் பதவி உயா்வுக்கான நிபந்தனை தளா்வு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு


கணினி ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கு 8 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநராக பணிபுரிபவா்களை அடுத்த நிலைக்கு பதவிஉயா்வு செய்வதற்கு ஏதுவாக தகுதியானவா்கள் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த சூழலில் பதவி உயா்வுக்கு குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

விரைவில் அரசாணை வெளியாக உள்ள நிலையில் திருத்தப்பட்ட வரையறைகளின்படி புதிய பட்டியலை தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனா்.

அதன்படி இளநிலையில் இரட்டை படிப்பு படித்தவா்களையும், துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவா்களையும் பட்டியலில் சேர்க்கக் கூடாது. மேலும் 8 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக இதுவரை பதவி உயா்வு பட்டியலில் சேர்க்கப்படாத தகுதியானவா்களின் பெயா்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். இந்த பணிகளில் தாமதம் எதுவும் செய்தல் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment