கொரோனா பாதிப்பு : தமிழகத்தின் தற்போதையை நிலை..! - முழு விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 22, 2020

கொரோனா பாதிப்பு : தமிழகத்தின் தற்போதையை நிலை..! - முழு விவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர கோவை, ஈரோடு நகரங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்குபின் அவர் வீடு திரும்பினார்.


டெல்லியில் இருந்து சென்னை வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் அயர்லாந்தில் இருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்புடன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிக்கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த இருவர் மற்றும் நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.


இதில், நியூசிலாந்தில் இருந்து வந்த 65 வயதுடைய நபருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் 9 பேர் மற்றும் சிகிச்சையளித்த 11 மருத்துவர்கள் என மொத்தம் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



கொரோனா பாதிப்புடைய தாய்லாந்தை சேர்ந்த இருவர் ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் உள்ள ஐ.ஆர்.டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த 49 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி கடந்த 17-ம் தேதி உயிரிழந்தார்.


அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது மருத்துவ சோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும் அந்த நபருடன் தாய்லாந்தில் இருந்து வந்ததாகக் கூறப்படும் 5 பேரை சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.

அதில், இருவருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து ஐ.ஆர்.டி மருத்துவமனையில் தனிவார்டில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் கோவை மருத்துவமனையில் உயிரிழந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்தவருடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவை திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த 25 வயது மாணவி ஸ்பெயின் நாட்டில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டிலிருந்து வெளிநாட்டவர் வெளியேற்றப்பட்டனர்

.இதைத்தொடர்ந்து பெங்களூர் வழியாக மாணவி கோவை திரும்பினார். விமான நிலையத்தில் எந்த அறிகுறிகளும் இல்லாததால் அந்த மாணவியை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தபட்டு இருந்தது. இந்நிலையில் மாணவியின் உடன் இருந்த நண்பர் ஒருவருக்கு பிரேசிலில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த மாணவி உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று தனது வெளிநாட்டு பயண விபரங்களை தெரிவித்து சோதனைக்கு உட்படுத்தி கொண்டார்.


 பின்னர் மாணவி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 தனி வார்டில் மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பெண்ணின் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் பயணத்தின் போது உடன் இருந்தவர்கள் என அனைவரையும் கண்காணிப்புக்குள் கொண்டுவர சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.

தமிழகத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 லட்சத்து 5 ஆயிரத்து 396 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அதில், 9 ஆயிரத்து 924 பேரை கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தனிவார்டுகளில் 54 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 443 மாதிரிகள் சோதனைக்குட்படுத்தியதில் 352 பேருக்கு கொரோனா இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 84 மாதிரிகள் பரிசோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்

No comments:

Post a Comment