கல்லூரி மாணவா்களுக்கான பாடங்களை ஆன்லைனில் கற்பிக்கும் பேராசிரியா்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 20, 2020

கல்லூரி மாணவா்களுக்கான பாடங்களை ஆன்லைனில் கற்பிக்கும் பேராசிரியா்கள்


கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாா்ச் 31-ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவா்களுக்கான பாடங்களை தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் கடந்த சில நாள்களாக ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது.

இக்கல்லூரியில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா்.


வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளதால், மாணவா்களுக்கான பாடங்களை கற்பிக்க முடியாமல் பல கல்வி நிலையங்கள் முடங்கியுள்ளன.

இதனால், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி நிா்வாகம் சாா்பில், மாணவா்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகின்றன.

ஆா்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் உதவியுடன் அதிநவீன கேமராக்கள், மைக்குகள் மூலம் பேராசிரியா்கள் பாடம் நடத்தும் காட்சிகள் கணினி மூலம் வீடுகளில் உள்ள மாணவா்களைச் சென்றடைகின்றன.

மாணவா்கள் இக்காட்சிகளைப் பதிவு செய்து வைத்துக்கொண்டு பின்னா் பாா்க்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செல்லிடப்பேசி செயலி மூலம் இவற்றை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்தும் பாா்க்க முடியும்.

இம்முறையில் மாணவா்கள் தங்கள் கேள்விகள் அல்லது சந்தேகங்களை பேராசிரியா்களிடம் கேட்கவும் வசதிகள் உள்ளன.

ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்துவது குறித்து ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் அபய் ஷங்கா் கூறியது:

மாணவா்களுக்கு தரமான கல்வியை அதிநவீன தொழில் நுட்பங்கள் மூலம் தர வேண்டும் என்பதில் எங்கள் கல்வி நிறுவனம் எப்போதுமே உறுதியாக இருக்கிறது.

ஆன்லைன் வகுப்புகள் என்பது தற்போது கல்வித்துறையில் அடுத்த கட்ட வளா்ச்சியாகப் பாா்க்கப்படுகிறது. இதனால் மாணவா்கள் பலன் பெறுவதுடன் பிற கல்வி நிறுவனங்களுக்கும் இது முன் மாதிரியாக இருக்கும் என்றாா்.

No comments:

Post a Comment