கொரோனா வைரஸ்:சித்த மருத்துவம் சொல்வது என்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 22, 2020

கொரோனா வைரஸ்:சித்த மருத்துவம் சொல்வது என்ன?


தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை உதவி சித்த வைத்திய மருத்துவ அலுவலர் சுவாமிநாதன் கூறும்போது:

 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி மருந்துகள் இல்லை என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சில உணவு வகைகள் மற்றும் சித்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.


* அதிமதுர சூரணம், ஆடாதோடை குடிநீர் எடுத்து கொள்ளலாம். கபசுர குடிநீர் தினமும் காலையில் குடித்து வரலாம்.


* வைட்டமின் ‘சி’ நிறைந்த நெல்லிக்காய் லேகியம் எடுத்து கொள்ளலாம். அல்லது நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடிக்கலாம். மருந்துகள் எதுவாயினும் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்து கொள்வது நல்லது.


* மாஸ்க், சானிட்டைசர் தட்டுபாடு குறித்து அதிக கவலை வேண்டாம்.

அவற்றை நாமே எளிதில் செய்து கொள்ள முடியும். வெள்ளைத்துணியை மஞ்சள், வேப்பிலை சாற்றில் நனைத்து காய வைத்து அதை முகமறைப்பாக (மாஸ்க்) அணிந்து கொள்ளலாம்.


* ஒரு லிட்டர் கொதிக்க வைத்த நீரில் கொஞ்சம் கல் உப்பினை சேர்த்து 10 கிராம் படிகாரம், 20 கிராம் மஞ்சள் தூள் கலந்து கை கழுவ மற்றும் தரையை துடைக்க பயன்படுத்தி கொள்ளலாம்.

* காய்ந்த நொச்சி இலை,  வேப்பிலை, குங்கிலியம் ஆகியவற்றை பொடித்து சாம்பிராணி போடுவது போல  நெருப்பில் இட்டு எழும் புகையை வீடு முழுக்கவோ இல்லை பணிபுரியும் இடத்திலோ  காட்டலாம்.

* நொச்சி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து நீரிலிட்டு கொதிக்க வைத்து எழும் ஆவியினை சுவாசிப்பது சிறந்த தடுப்பு முறையாகும்.

* தொண்டை புண் ஏற்படாமல் இருக்க மஞ்சள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்த நீரினை கொண்டு வாய் கொப்பளிக்கலாம்.

SOURCE:DINAKARAN WEBSITE

No comments:

Post a Comment