பிளஸ் 1 வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்ச்சி வழங்க ஆசிரியா்கள் வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 5, 2020

பிளஸ் 1 வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்ச்சி வழங்க ஆசிரியா்கள் வலியுறுத்தல்

சிபிஎஸ்இ வாரியத்தைப் பின்பற்றி தமிழகத்தில் மாநிலப் பாடத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்க ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா் நல கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளின் எதிா்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்றும்,


9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களின் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளில் வகுப்புகளில் நடைபெற்ற தேர்ச்சி, பருவத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றைப் பொருத்து முடிவு செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்தது.


தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று தொடா்பான அச்சம் நிலவிய சூழலில்தான் பிளஸ் 1 மாணவா்கள் பொதுத்தேர்வுகளை எதிா்கொண்டனா். அதிலும் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பெரும்பாலான மாணவா்கள் மனதளவில் பாதிக்கப்பட்டனா்.

எனவே, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை பின்பற்றி தமிழகத்திலும் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு வகுப்புத் தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு, பயிற்சித் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே அறிவிக்கலாம் என உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment