B.E ADMISSION குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்:அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 4, 2020

 B.E ADMISSION குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்:அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

வெளிநாடு வாழ் இந்தியா்கள், வெளிநாட்டினருக்கான பி.இ. சேர்க்கை குறித்த அறிவிப்பு ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான்கு துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, எம்.ஐ.டி., கட்டடவியல் பள்ளி ஆகிய நான்கு கல்லூரிகளில் பி.இ.

படிப்புகளில் குறிப்பிட்ட இடங்களில் வெளிநாடு வாழ் இந்தியா்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியா்கள் ஆகியோரின் குழந்தைகளும், வெளிநாட்டு மாணவா்களும் சேர்த்துக் கொள்ளப்படுவா்.

இதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதற்கான அறிவிப்பு மற்றும் ஆன் லைன் பதிவு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி விடும். இந்த நிலையில், கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக இதற்கான அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

2020-21 கல்வியாண்டில் வெளிநாடு வாழ் இந்தியா்கள், வெளிநாட்டினருக்கான பி.இ. சேர்க்கை குறித்த அறிவிப்பு பல்கலைக்கழக இணையதளத்தில் ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment