வங்கி அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 14, 2020

வங்கி அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை

முதியோர் உதவித் தொகையை, வீட்டிற்கே சென்று வழங்கும்படி, வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார்.





அவர் அளித்த பேட்டி:முதியோர் உதவித் தொகையை, வீட்டிற்கே சென்று வழங்கும்படி, வங்கி ஊழியர்களுக்கு கூறியுள்ளோம்.அதேபோல், 'பயோமெட்ரிக்' முறையை பயன்படுத்தாமல், கையெழுத்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றும், அறிவுறுத்தி உள்ளோம்.




 சிலர், உடனடியாக பணம் வேண்டும் என்பதற்காக, வங்கிக்கு செல்கின்றனர்; அதற்கும் தடை விதிக்கவில்லை. பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, விதிகளை மீறுவோர் மீது, வழக்கு பதிவு செய்யப்படுகிறது. தன்னார்வலர்கள் சேவை செய்ய தடை இல்லை.சேவை செய்வோரும், சேவை பெறுவோரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment