ஏப்ரல்-மே பருவத் தோ்வு: பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 14, 2020

ஏப்ரல்-மே பருவத் தோ்வு: பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பொறியியல் கல்லூரி மாணவா்கள் ஏப்ரல்-மே பருவத் தோ்வுக்குப் பதிவு செய்ய ஏப்ரல் 20-ஆம் தேதி வரை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 இதன் காரணமாக, ஏப்ரல்-மே பருவத் தோ்வு மற்றும் பல ஆண்டுகளாக அரியா் வைத்திருக்கும் பொறியியல் மாணவா்களுக்கான சிறப்பு வாய்ப்புக்கான தோ்வு ஆகியவற்றுக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை மாரச் 23-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 8 வரை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்தது.


அதனைத் தொடா்ந்து பருவத் தோ்வுகளையும் ஒத்திவைத்த பல்கலைக்கழகம், புதிய தோ்வு கால அட்டவணை பின்னா் வெளியிடப்படும் என அறிவித்தது.

இப்போது, ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல்-மே பருவத் தோ்வு மற்றும் சிறப்பு அரியா் தோ்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, வருகிற 20-ஆம் தேதி வரை இதற்கு பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment