தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 29 மாவட்டங்கள் அதிக கொரோனா பாதிப்பு உள்ள 'ரெட் ஸோன்' மாவட்டங்களாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. முன்னதாக 22 மாவட்டங்களாக இருந்த ரெட் ஸோன் எண்ணிக்கை தற்போது 29-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய நிலையில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை எந்தெந்த மாவட்டங்கள் 'ஹாட் ஸ்பாட்', 'ஹாட் ஸ்பாட் இல்லாதவை' என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஹாட் ஸ்பாட் (சிவப்பு மண்டலம்) என்றால் அதிக கவனம் தேவைப்படும் மாவட்டங்களாகும். இங்கு அதிக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அல்லது பரவல் விகிதம் அதிகரிப்பு என்பதை குறிக்கும்.
அந்த வகையில் 15 பேர் அல்லது 4 நாட்களுக்குள் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பு ஆவது என்ற வகையில் தமிழக சுகாதாரத்துறை மண்டலங்களை பிரித்து அறிவித்துள்ளது.
தமிழகத்தின், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், தென்காசி, சேலம், நாகை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஆரஞ்சு மண்டலமாக இருந்த , தஞ்சை, காஞ்சிபுரம், ராமநாதபுரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களும் தற்போது ரெட் ஜோன்னாக அறிவிக்கப்பட்டுள்ளது
. கடந்த 15-ம் தேதி 22 மாவட்டங்கள் ரெட் ஜோன்னாக இருந்த நிலையில், தற்போது அது 29 மாவட்டமாக அதிகரித்துள்ளது.
மேலும், திருவண்ணாமலை, சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் அல்லாத மாவட்டங்கள் என்றாலும் ஆரஞ்சு மண்டலமாக இருக்கிறது. இந்த மாவட்டங்களில் 15 நபருக்கு குறைவாக தொற்று உள்ளது.
28 நாட்களுக்குள் புதிதாக எந்த கொரோனா நோயாளியும் வராத பட்சத்தில் அது பச்சை மண்டலம். அதாவது பாதுகாப்பான மண்டலமாக கருதப்படும். அந்த வகையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலமாக உள்ளது
SOURCE: NEWS 18 TAMIL
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய நிலையில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை எந்தெந்த மாவட்டங்கள் 'ஹாட் ஸ்பாட்', 'ஹாட் ஸ்பாட் இல்லாதவை' என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஹாட் ஸ்பாட் (சிவப்பு மண்டலம்) என்றால் அதிக கவனம் தேவைப்படும் மாவட்டங்களாகும். இங்கு அதிக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அல்லது பரவல் விகிதம் அதிகரிப்பு என்பதை குறிக்கும்.
அந்த வகையில் 15 பேர் அல்லது 4 நாட்களுக்குள் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பு ஆவது என்ற வகையில் தமிழக சுகாதாரத்துறை மண்டலங்களை பிரித்து அறிவித்துள்ளது.
தமிழகத்தின், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், தென்காசி, சேலம், நாகை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஆரஞ்சு மண்டலமாக இருந்த , தஞ்சை, காஞ்சிபுரம், ராமநாதபுரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களும் தற்போது ரெட் ஜோன்னாக அறிவிக்கப்பட்டுள்ளது
. கடந்த 15-ம் தேதி 22 மாவட்டங்கள் ரெட் ஜோன்னாக இருந்த நிலையில், தற்போது அது 29 மாவட்டமாக அதிகரித்துள்ளது.
மேலும், திருவண்ணாமலை, சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் அல்லாத மாவட்டங்கள் என்றாலும் ஆரஞ்சு மண்டலமாக இருக்கிறது. இந்த மாவட்டங்களில் 15 நபருக்கு குறைவாக தொற்று உள்ளது.
28 நாட்களுக்குள் புதிதாக எந்த கொரோனா நோயாளியும் வராத பட்சத்தில் அது பச்சை மண்டலம். அதாவது பாதுகாப்பான மண்டலமாக கருதப்படும். அந்த வகையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலமாக உள்ளது
SOURCE: NEWS 18 TAMIL
No comments:
Post a Comment