எந்த வங்கிக்கணக்கில் இருந்தும் அஞ்சலகங்கள் வழியாக 15 நிமிடங்களுக்குள் பணத்தை நேரடியாக பெறும் வசதி அறிமுகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 25, 2020

எந்த வங்கிக்கணக்கில் இருந்தும் அஞ்சலகங்கள் வழியாக 15 நிமிடங்களுக்குள் பணத்தை நேரடியாக பெறும் வசதி அறிமுகம்

எந்த வங்கிக்கணக்கில் இருந்தும் அஞ்சலகங்கள் வழியாக 15 நிமிடங்களுக்குள் பணத்தை நேரடியாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


வங்கிகள் இல்லாத கிராமங்களில் வசிப்பவர்கள் ஏடிஎம் சென்று பணம் எடுக்காமல் தவிக்கின்றனர்.

 இந்த நிலையில், உள்ளூர் அஞ்சலக அலுவலகத்திற்கு தொடர்புக் கொண்டு பணத்தை பெறலாம் என்றும் இதற்காக அஞ்சலகங்களில் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆதார் எண் அடிப்படையில் பணப்பரிமாற்றம் கருவி மூலம் வேறு வங்கிகளிடம் இருந்து அஞ்சலகங்கள் வழியாக 15 நிமிடங்களுக்குள் பணம் பெற முடியும்

. வீடுகளுக்கே பணம் அளிப்பதற்காக நாடு முழுவதும் 2 லட்சம் அஞ்சலக பணியாளர்கள் இருப்பதாகவும், கடந்த மாதம் 24 முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை 412 கோடி பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் தபால் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment