மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் கடைசித் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுவாய்ப்பு வழங்கியுள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது, கடந்த மார்ச் 24-ந் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வை எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு மட்டும் ஜூலை 4-ம் தேதி மறு தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அதாவது, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் 4-ம் தேதி வேதியியல் / கணக்குப் பதிவியல் / புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும், 12ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன 36,842 மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி மே 27-ம் தேதி தொடங்கும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது, கடந்த மார்ச் 24-ந் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வை எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு மட்டும் ஜூலை 4-ம் தேதி மறு தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அதாவது, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் 4-ம் தேதி வேதியியல் / கணக்குப் பதிவியல் / புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும், 12ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன 36,842 மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி மே 27-ம் தேதி தொடங்கும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
No comments:
Post a Comment