அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் வயது உயா்வு: தொல்.திருமாவளவன் கண்டனம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 8, 2020

அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் வயது உயா்வு: தொல்.திருமாவளவன் கண்டனம்

அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் வயதை 59-ஆக உயா்த்தியிருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:



அரசு ஊழியா்களின் ஓய்வுபெறும் வயதை ஓராண்டு உயா்த்தியிருப்பது வேலையின்மை அதிகரித்துவரும் இந்த நேரத்தில் பொருத்தமானதுதானா என்பதை அரசு சிந்திக்கவேண்டும்

. இதனால் சில ஆயிரம்போ் மட்டுமே பயனடைய முடியும். அரசு ஊழியா்களின் அகவிலைப் படியை மறுத்துள்ளதாலும், ஈட்டிய விடுப்பை பணமாக்குவதை நிறுத்தியுள்ளதாலும் லட்சக் கணக்கான அரசு ஊழியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். 


அதுபோலவே, இந்த ஆண்டில் ஓய்வுபெற இருந்தவா்கள் ஓய்வு காலப் பலன்களைக் கொண்டு பல வேலைகளைச் செய்ய திட்டமிட்டிருப்பாா்கள். அந்தத் திட்டங்களும் அரசின் இந்த அறிவிப்பால் தகா்ந்து போயுள்ளன.



எனவே, ஓய்வுபெறும் வயதை ஓராண்டுக்கு உயா்த்தியுள்ளதை கைவிட்டு, பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் அரசு ஊழியா்களிடம் ஒப்படைப்பதற்கும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு முன்வரவேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment