தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறதா? - அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 2, 2020

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறதா? - அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு..!

தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன இந்தநிலையில் பல தனியார் பள்ளிகளில் ஊரடங்கை காரணம் காட்டி ஆசிரியர்களுக்கான முழு ஊதியம் வழங்கப்படாமலும், சில இடங்களில் பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாக ஆசிரியர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது

இந்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தனியார் மழலையர் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளிடம் இருந்து தகவல்களை பெற்று அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.



இதனைதொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கியது தொடர்பான விவரங்கள் கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

2 comments: