கொரோனாவை கட்டுப்படுத்த இதை செய்தால் போதும்: கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 24, 2020

கொரோனாவை கட்டுப்படுத்த இதை செய்தால் போதும்: கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

கொரோனாவை கட்டுப்படுத்த 100% முகக்கவசம் அணிவது மட்டுமே ஒரே வழி என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 569 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14, 753 ஆகஉள்ளது. அதிலும், சென்னையில் 9364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் வரை நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

 இங்கு புதிதாக ஏற்படும் தொற்றுகள் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த 100% முகக்கவசம் அணிவது மட்டுமே ஒரே வழி என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


மேலும் சென்னையின் 3 மண்டலங்களில் நோய்த் தாக்கம் குறைந்து வருவதாகவும் கூறினார். பொதுவாக கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் , சமூக இடைவெளி ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் என்பது குறிபிடத்தக்கது.

No comments:

Post a Comment