சூழ்நிலையை பொறுத்து முடிவு:
அனைத்து உயர்கல்வி நிறுவனங் களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்
பருவத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக உள்ளூர் சூழ்நிலை யைப் பொறுத்து முடிவெடுக்க உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழும உறுப்பினர் செயலர் ராஜீவ்குமார் அனைத்து உயர்கல்வி நிறுவனங் களுக்கும் அனுப்பிய சுற்றறிக் கையில், ‘‘புதிய கல்வி ஆண்டு தாமதம் தொடர்பாக பல்கலை. மானியக் குழு (யுஜிசி) வெளி யிட்ட வழிகாட்டுதலின்படி கடந்த கல்வி ஆண்டுக்கான பருவத் தேர்வுகளை ஜூலையில் நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்தச் சூழலில் பருவத்தேர்வு கள் தொடர்பாக தொடர்ந்து புகார் கள் ஏஐசிடிஇ-க்கு வருகின்றன. மேலும், மாணவர்களின் கருத்து களுக்கு மதிப்பளித்தும், உள்ளூர் சூழலைக் கருத்தில் கொண்டும் பல்கலைக்கழகங்கள், கல்லூரி கள், தேர்வுகளை நடத்திக் கொள் ளலாம்’’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment