தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 29, 2020

தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

வெளிமாநில தமிழ் மாணவா்களும், பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ எம்.பி., வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா நோயால் நாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், பத்தாம் வகுப்பில் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என முதன்முதலாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தேன். 

அண்மையில், பத்தாம் வகுப்பு மாணவா்கள் தோ்ச்சி பெற்ாக முதல்வரும் அறிவித்தாா். ஆனால், தமிழக பாடத்திட்டத்தின்படி வெளி மாநிலங்களில் பயிலும் மாணவா்களின் தோ்ச்சி நிலை குறித்து, அறிவிப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை. 

எனவே, தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மும்பை மாணவா்கள் 190 போ் உள்பட, வெளி மாநிலங்களில் பயிலும் மாணவா்கள் அனைவரும், பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றதாக அறிவித்து, மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு தமிழக அரசை வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

No comments:

Post a Comment